செய்திகள்

IPL2022 ன் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

Published

on

2022ஆம் ஆண்டு IPLலின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விபரங்களை இந்தியன் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

IPL 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடைபெறவுள்ளது.

அதன் ஏலத்திற்கு முன் அணிகள் தங்கள் பழைய வீரர்களில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும் என்பது IPL லின் நியதியாகும்.

இந் நிலையில் IPLலின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விபரங்களை இந்தியன் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் 2 பேரையும் தக்கவைத்துள்ளன.

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களும் அவர்களுக்குரிய ஏலத்தொகைகளும் விபரம் பின்வருமாறு..

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா – ₹16 கோடி
எம்.எஸ். தோனி – ₹12 கோடி
மொயீன் அலி – ₹8 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் – ₹6 கோடி
மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா – ₹16 கோடி
ஜாஸ்பிரீத் பும்ரா – ₹12 கோடி
சூர்யகுமார் யாதவ் – ₹8 கோடி
கைரன் பொலார்ட் – ₹6 கோடி
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி – ₹15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் – ₹11 கோடி
மொஹமட் சிராஜ் – ₹7 கோடி
டெல்லி கேபிடல்ஸ்:

ரிஷப் பந்த் – ₹16 கோடி
அக்சர் படேல் – ₹9 கோடி
பிரித்வி ஷா – ₹7.50 கோடி
அன்ரிச் நோர்க்கியா – ₹6.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் – ₹12 கோடி
வருண் சக்ரவர்த்தி – ₹8 கோடி
வெங்கடேஷ் ஐயர் – ₹8 கோடி
சுனில் நரைன் – ₹ 6 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் – ₹12 கோடி
அர்ஷ்தீப் சிங் – ₹ 4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் – ₹14 கோடி
அப்துல் சமத் – ₹4 கோடி
உம்ரான் மாலிக் – ₹ 4 கோடி
ராஜஸ்தான் ரோயல்ஸ்:

சஞ்சு சாம்சன் – ₹14 கோடி
ஜாஸ் பட்லர் – ₹10 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ₹4 கோடி

#SPORTS

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version