விளையாட்டு

சென்னையை இறுதிக்கு அழைத்துச் சென்ற தல டோனி

Published

on

நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி இன்று இடம்பெற்ற நிலையில் டில்லி கேப்பிட்டல் அணியை நான்கு இலக்குகளால் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமுதலாவது தகுதிச் சுற்றுப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்பிட்டல்ஸ், 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

174 என்ற வெற்றியிலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, ரொபின் உத்தப்பா மற்றும் ருத்ராஜ் ஜக்வாட் ஆகியோரின் பொறுப்புணர்ந்த ஆட்டம் கைகொடுக்க, அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி வெற்றிக்கான நான்கு ஓட்டங்களைப் பெற்று, போட்டியை வெற்றியுடன் நிறைவுசெய்தார்.

இதன் மூலம் சென்னை முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.ஐ.பி.எல் வரலாற்றில் 9வது முறையாக சென்னை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

இரண்டாவது தகுதிச் சுற்றுப்போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில்,  பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் நாளை மோதுகின்றன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version