அரசியல்
கையெழுத்து வேட்டையில் சமயத்தலைவர்களும்!!
![கையெழுத்து வேட்டையில் சமயத்தலைவர்களும்!! 7 IMG 4441](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/02/IMG_4441.jpg?lossy=2&strip=1&webp=1)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்
இதன்படி நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் , ஆண்டகை ஆகியோரிடம் இன்றைய தினம் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கையெழுத்து பெற்றனர்.
அத்துடன் தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login