அரசியல்

பின்வாங்கிய சுகாதார தொழிற்சங்கங்கள்!!

Published

on

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக 18 தொழிற்சங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version