அரசியல்

புரட்சிகரமான வரவு – செலவுத் திட்டம்! -அங்கஜன்

Published

on

சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் பாராட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 16 உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழில் 6 நகரங்களை தரமுயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரத்துக்கு பின் இலங்கையில் கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான வரவு – செலவுத் திட்டமே இது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரதமரின் அனுபவங்களையும் உள்வாங்கி ஒரு சிறப்பான பாதீட்டை வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version