பிராந்தியம்
சோழர்கால சிவனுக்கு இன்று அடிக்கல்!!
சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு தற்சமயம் சிதைவடைந்து காணப்படுகின்ற, மடத்தடி சிவன் ஆலய முன்றலில் சிவலிங்கம் நிறுவுவதற்கான பீடமொன்றுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (16) இடம்பெற்றது.
அடிக்கல் நடப்பட்ட பீடத்தில் சிவனருள் பவுண்டேசன் அனுசரணையில் மட்டக்களப்பு ஆதீன ஸ்தாபகரும் இயக்குனருமான மு.ஜெயபாலனின் ஏற்பாட்டில் எதிர்வரும் சிவராத்திரியன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login