இலங்கை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Published

on

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதன்போது சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 ரக விமானத்தில் ஜனாதிபதி நேற்று (22.08.2023) இரவு 11.35 மணியளவில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகளும் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version