இலங்கை

கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

Published

on

கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்ற உத்தரவு தொடர்பில் ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணியாற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சேவையின் தேவை கருதி சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் பணிபுரிய அனுமதிக்குமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவைக்கதிகமான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

1 Comment

  1. Pingback: 8000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version