இலங்கை

கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி!

Published

on

கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி!

வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு இடையே அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version