இலங்கை

நாடாளாவிய ரீீதியில் சைக்கிள் பயணம் துவங்கியுள்ள இளைஞன்!

Published

on

நாடாளாவிய ரீீதியில் சைக்கிள் பயணம் துவங்கியுள்ள இளைஞன்!

புத்தளம் -கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒரு மாதம் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயணத்தை இன்று காலை (15.08.2023) ஆரம்பித்துள்ளார்.

இச்சுற்றுப் பயணத்தை புத்தளம்- தில்லையடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் எல்.ஏ.என் நப்ஸான் என்ற 31 வயதுடைய இளைஞர் ஆரம்பித்துள்ளார்.

குறித்தப் பயணம் போதை ஒழிப்பு, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என்ற மூன்று கோரிக்கையை முன்வைத்து ஆரம்பித்துள்ளதாக எல்.ஏ.என் நப்ஸான் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞரை ஊக்குவிக்குமுகமாக புத்தளம் நகரசபை செயலாளர், புத்தளம் வர்த்தக நலன்புறிச் சங்கம், மற்றும் லகூன் இளைஞர் அமைப்பு பிரதேச மக்கள் ஆகியோர் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version