இலங்கை

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள ரணிலின் திட்டம்

Published

on

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள ரணிலின் திட்டம்

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி, விவசாயம், பெருந்தோட்ட, நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களை இணைத்து செயலணி ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டிணைப்பு, 9 மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version