அரசியல்

நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

Published

on

நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் இன்றி விவசாயிகளுக்காக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விவசாயிகள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு துரித கதியில் பதிலளித்தமைக்காக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விசேடமாக நன்றி கூறியுள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version