இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

Published

on

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென அவர் இங்கு உறுதியளித்துள்ளார்.

அத்தோடு ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி நாடாளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version