இலங்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு

Published

on

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு

வாகனங்கள் தவிர்ந்த, தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சுமார் 900 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version