இலங்கை

2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு

Published

on

2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் கிராம சேவை மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான அரச அதிகாரிகளாக காணப்படுகின்றனர்.

ஆகவே, கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றமை அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும்.

இதனால், புதிய நபர்களை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தராக செயற்பட விரும்பும் அரச அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version