இலங்கை

மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க காத்திருக்கும் மக்கள்!

Published

on

மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க காத்திருக்கும் மக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்த ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றில் கூடிய அதிகாரத்தை கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையில் நாட்டின் அதிகாரத்தை விரைவில் கைப்பற்றிக்கொள்வதாகவும் மகிந்தவிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர் என சாகர தெரிவித்துள்ளார்.

1 Comment

  1. Pingback: விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய பிரதான தேரர்கள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version