இலங்கை

பல உயிர்களை பறித்த கோர விபத்து! பேருந்து சாரதி அதிரடியாக கைது

Published

on

பல உயிர்களை பறித்த கோர விபத்து! பேருந்து சாரதி அதிரடியாக கைது

பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version