இலங்கை

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

Published

on

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் நிமால் லான்சா ஆகியோரின் தலைமையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவர் அந்த வீட்டுக்குப் பொறுப்பாக நிறுத்தப்பட்டு அவர்களின் ஊடாகப் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசுதல் உட்பட பல வேலைத்திட்டங்கள் இந்த வீட்டில் இருந்து தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அறிய முடிகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version