அரசியல்

ஆட்சியாளர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!!

Published

on

ஆட்சியாளர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐ.எம்.எப் எப்போதும் ஒரு நாட்டிற்குள் வந்து அந்த நாட்டை ஆட்சி செய்யும் முறையை பற்றியோ அந்த நாட்டினுடைய அரசியல் தீர்வை பற்றியோ எதுவும் சொல்லமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,“இனவாதமே இந்த நாட்டில் இருக்கின்ற பேய் மற்றும் பிசாசு.

உண்மையில் இந்த நாடு, நிரந்தரமான ஸ்திரத்தன்மையை அடைய வேண்டும் என்றால் அந்த இனவாதத்தை ஒழிக்க வேண்டும்.

இலங்கையை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக இனவாதத்தை முன்வைப்பார்களாக இருந்தால் தமிழ் சமூகத்தை தொடர்ந்தும் அடக்க முயற்சிப்பார்களாக இருந்தால் சம உரிமை தரவில்லை என்றால் ஐ.எம்.எப் என்ற பேயோ பிசாசோ இல்லை இந்த நாட்டை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version