இலங்கை

அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம்

Published

on

அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம்

ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா ஏயார் லயின்ஸிற்கு சொந்தமான விமானம் மீண்டும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 07:50 க்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A330-300 விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சக்கரம் உரிய முறையில் செயற்படாமையே, விமானத்தை தரையிறக்க காரணம் என அறிவிக்கப்படுகின்றது.

விமானம் தரையிறக்கப்படும் வரை, குறித்த விமானம் 155 நிமிடங்கள் பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version