இலங்கை
மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் சீனா – கொழும்பில் முதலிடப்படும் 37 ஆயிரம் கோடி
Published
11 மாதங்கள் agoon
கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் கூறியுள்ளது.
பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் வாய் இயன் சான் இதனைத் தெரிவித்துள்ளர்.
இந்த ஆண்டிற்குள் குறித்த நிதியை கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
சீனாவில் அலி சப்ரி
தற்போது சீனாவுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் பூலின் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக தாம் ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Topics:ChachinacolomboCurrent newsNews
You must be logged in to post a comment Login