இலங்கை

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த ஜீப்!

Published

on

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த ஜீப்!

குருநாகலில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜீப் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (20) காலை குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயதான சித்துமினி ராஜகுரு என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்து சம்பவம் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version