இலங்கை

வெலிகமவில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு !

Published

on

வெலிகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிட்டதெனிய பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கமல் சமிந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருடன் வந்த மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து ஓடிய போது அவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

1 Comment

  1. Pingback: தென்னிலங்கையில் திடீரென நிறம் மாறிய கடல் அலை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version