இலங்கை

மீண்டும் தமிழரின் தாயகத்தில் குடியேற வரும் புத்தர்..!

Published

on

மீண்டும் தமிழரின் தாயகத்தில் குடியேற வரும் புத்தர்..!

திருகோணமலை நகரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் புத்தர் சிலை ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது திருகோணமலை நகரில் உள்ள நெல்சன் திரையரங்குக்கு முன்னால் நிறுவப்படவுள்ளது.

2ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவு கூறும் முகமாக இந்த நிர்மாணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்விற்காக தாய்லாந்தில் இருந்து குறித்த புத்தர் சிலையோடு 50 பிக்குகள் நாளை இலங்கை வரவுள்ளதாகவும் இவர்கள் தங்குவதற்காக நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கடற்படைக்கு சென்று காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக பிக்குகள் வந்து இறங்கிய பின்னர் பாதயாத்திரை மூலம் குறித்த இடத்திற்கு செல்லவுள்ளனர்.

அங்கு தாய்லாந்தில் இருந்து அவர்களால் கொண்டு வரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை வைத்து ஒரு மணித்தியாலம் பிரித் நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version