இலங்கை

நீராடச் சென்றதில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Published

on

நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக் ஓயாவில் நேற்று (06) நீராடச் சென்ற போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் 42 வயதுடைய உடஹவத்தையைச் சேர்ந்தவரென தெரிய வந்துள்ளது.

அத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய பெண் அவிசாவளையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version