அரசியல்
மாமனிதர் சிவராம் அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் !
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கிய புளொட் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment Login