இலங்கை

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Published

on

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து  இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதான செயலாளர் டபிள்யூ. ஜோதிரத்ன தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version