இலங்கை
மூன்று தினங்களுக்கு சிறைக்கைதிகளை சந்திக்க வாய்ப்பு!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கைதிகளை சந்திக்க பிரவேசிக்கும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களை கொண்டு வர முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login