அரசியல்

லிங்கத்துடன் வெடுக்குநாறி விரைந்தார் ஜீவன்

Published

on

சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சற்றுமுன்னர் சென்றிருந்தார்.

அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே அங்கு சென்றிருந்தனர்.

சேதமாக்கப்பட்ட ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பேன் என்று தெரிவித்திருந்த அமைச்சர் ஜீவன், லிங்கம் உள்ளிட்ட இன்னும் சில சிலைகளையும் எடுத்துச் சென்றிருந்தார்.

எனினும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரையிலும் எவ்விதமான நடவடிக்கையையும் முன்னெடுக்காது, ஆசீர்வாத பூஜை மட்டுமே இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் இந்துசமய ஆலோசகர் பாபு சர்மா தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version