இலங்கை

பாராளுமன்ற வங்கிக் கிளைக்கு பூட்டு!!

Published

on

வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதேவேளையில் பாராளுமன்றத்திலுள்ள  இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எம்பிக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிக் கிளை மூடப்படும் எனத் துண்டுப் பிரசுரமும் காட்சிப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டிருந்த போதிலும், நீர், மின்சாரம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் ஏனைய சேவை அலுவலகங்கள் வழமை போன்று திறந்திருந்தன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version