அரசியல்

தேர்தலை பிற்போட முயற்சி! – அன்பிரெல் கவலை

Published

on

இலங்கையில் தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் குறித்து ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான அன்பிரெல் கவலை வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றிருக்கவேண்டிய உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கு இடம்பெறும் பல முயற்சிகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக அன்பிரெல் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் குறித்து கவலையடைந்துள்ளதுடன், அவர்கள் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version