இலங்கை

இந்திய விசா மையத்துக்கு பூட்டு

Published

on

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு பதிவான ‘பாதுகாப்பு சம்பவம்’ காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிக்கையிட்டுள்ளது.

அத்துடன், அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தில் மேற்கொண்ட தமது முன்பதிவுகளை  மீள்பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விடயத்துக்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version