இலங்கை
எரிபொருள் கொள்வனவு 30 சதவீதத்தால் குறைந்து
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருளின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், QR முறைப்படி, ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எரிபொருளை பெறுவதற்கு கூட நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
You must be logged in to post a comment Login