அரசியல்

ஜனாதிபதி வருகை – போராட்டத்தில் சிவாஜிலிங்கம் குழுவினர்

Published

on

ஜனாதிபதியின் வருகை எதிர்த்து தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

போராட்டமானது காந்தி சிலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் அனந்தி சசிதரன், வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி துணிவற்றவர். எம்மை இப்பாதையால் நடந்து சென்று சந்திக்க கூட பொலிசார் எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை .பொலிசார் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழில் உரையாடவில்லை சிங்களத்தில் பேசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பொலிசாருக்கு ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் பல மணி நேரங்கள் முறுகல் நிலை ஏற்பட்டது. பொலிசாரை திட்டி பல வார்த்தை பிரயோகங்களால் சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டார் அதே போல் போலிசாரும் பல கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளியிட்டனர்.

#SriLankaNews

Exit mobile version