அரசியல்

வசந்த முதலிகேவுக்கு பிணை

Published

on

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்று இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் இருந்தே வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version