இலங்கை

உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

Published

on

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளன.

3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிக பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சை நேரத்திலும், இரவு வேளையில் மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version