இலங்கை
வடக்கு ரயில்கள் நிறுத்தம்!!!
அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனுராதபுரம் – வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர காங்கேசன்துறையில் இருந்து முறுக்கண்டி வரை இயக்கப்படும் யாழ் ராணி ரயில் வவுனியா வரை மாத்திரம் இயக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login