இலங்கை

வடக்கு ரயில்கள் நிறுத்தம்!!!

Published

on

அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் – வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர காங்கேசன்துறையில் இருந்து முறுக்கண்டி வரை இயக்கப்படும் யாழ் ராணி ரயில் வவுனியா வரை மாத்திரம் இயக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version