இலங்கை

நாட்டிலிருந்து 3 லட்சம் பேர் வெளியேற்றம்

Published

on

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக அதிகாரபூர்வமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இந்த வருடத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிகாரபூர்வமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளியேறியுள்ளனர் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவையாகும் .

இதேவேளை உத்தியோகபூர்வ வழிகள் மூலம் நாட்டுக்கு வரும் அந்நிய செலாவணியும் கடந்த சில மாதங்களில் கணிசமான அதிகரிப்பை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version