இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு!

Published

on

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 106,500 ஆகும்.

இதுவரையிலும் 20 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 108,510 பேர்

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 78,827 பேரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 74,713 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version