இலங்கை
முட்டை விலை! – வர்த்தமானி இடைநிறுத்தம்
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று மீண்டும் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு நாளை (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
You must be logged in to post a comment Login