அரசியல்

வசந்த முதலிகே நீதிமன்றத்துக்கு

Published

on

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகேவுக்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வசந்த முதலிகே நேற்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version