இலங்கை
இறைச்சி கடைகளுக்கு பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.
இன்று (12) முதல் ஒருவார காலத்துக்கு அமுலில் இருக்கும் இந்த உத்தரவின் கீழ், கோழிக் கடைகள் மூடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login