இலங்கை
நீர் விநியோகம் தடை!
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (02) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய மின் விநியோகக் குழாய் பதிக்கப்பட்டதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login