இந்தியா
இந்திய மீனவர்களுக்கு மறியல்!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் இன்று (29) உத்தரவிட்டார்.
காரைநகர் கடற்பரப்புக்குள் 28 ஆம் திகதி திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ஐந்து படகுகளுடன் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களை யாழ் மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பெடுத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி இருந்தனர்.
You must be logged in to post a comment Login