இலங்கை
மொபைல், டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம்!
கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login