இந்தியா

கிளிநொச்சியை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

Published

on

மேலும் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனுஷ்கோடியின் முதல் தீவை இவர்கள் சென்றடைந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

பத்து இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று புதன்கிழமை இராமேஸ்வரம் கரையை இரகசியமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு இளைஞர், ஐந்து குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version