இலங்கை
யாழில் மாடு திருடியவர் அகப்பட்டார்!
யாழ். மாவட்டத்தில் சமீப காலமாக கிராமப் புறங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளை – வறுத்தளைவிளான் பகுதியில் மாடு ஒன்றுடன் மூவர் நடந்து சென்றுள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரிக்க முற்பட்ட பொழுது அவர்கள் ஓடியுள்ளனர். அதில் ஒருவர் துரத்திப் பிடிக்கப்பட்டு தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login