இலங்கை

இரத்த வகைகளுக்கு யாழில் தட்டுப்பாடு!

Published

on

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கிப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர்.

இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகமளித்து குருதி கொடை வழங்கலாம்.

அதேவேளை மேலதிக விபரங்கள் தேவைப்படினும் , இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version