அரசியல்

மஹிந்தவை பின்பற்றாமையே தோல்விக்கு காரணம்!

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தோல்விக்கு கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

கோட்டாபய ராஜபக்‌ஷ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்‌ஷ செவிமடுத்தார். அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்‌ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version