இலங்கை
தொற்றா நோய்களினால் அதிக மரணங்கள்!
நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை சேர்ப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login